கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் நல்லகண்ணு பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

கு. சண்முகநாதன் & திருச்சுழி

நல்லவர். பெரும் தொகை தனக்குக் கைக்கு (2 கோடி) வந்தபோதும் கட்சிக்குக் கொடுத்தவர். ஒரு மாலைப் பொழுதில் எங்கள் ஊர் கம்யூனிஸ்ட் ஆபிஸ் வாசலில் இவரை பஞ்சாயத்து தலைவர் சுடலைமுத்து நம்பியார் எனக்கு அறிமுகப்படுத்தினார்.

அம்பை சட்டமன்றத் தொகுதியில் தீட்சதரை எதிர்த்துபோட்டி போட்டு இருக்கிறார். இவரால் பல விவசாயக் குடும்பங்களுக்குக் கிடைத்த நன்மை ஒன்று உண்டு. கடனாநதி இராமநதி இவைகளெல்லாம் காங்கிரஸ் காலத்தில் கட்டப்பட்டது என்றால் அதற்கு காரணம் ஆம்பூர், ஆழ்வை, பொட்டல், கடையம் வட்டாரப் பகுதி விவசாயிகளை மனதில் வைத்துக் கொண்டு இவர் நடத்திய போராட்டத்தின் விளைவுதான்.

இன்று கடனாநதியிலிருந்து தென்காசிக்குக்கூட தண்ணீர் குடிக்கக் குழாய் மூலம் போகிறது. இந்த வட்டாரத்தில் விவசாய நிலங்கள் பூத்துக்குலுங்குகின்றன என்றால் அதற்குக் காரணம் தோழர் நல்ல கண்ணுதான். நானும் இந்த வட்டாரத்தைச் சேர்ந்தவன் என்பதால் அவருக்கு என்னுடைய வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

Labels: ,


 

மறுமொழிகள் :
ஐயா வணக்கம்.
கட்டுரைய படிக்கும் போது சந்தோஷமா இருக்கு. நல்லகண்ணு எனக்கும் வேண்டியவர்தான். நீங்க குறிப்பிட்டிருக்கிற சுடலைமுத்து நம்பியார் எங்க தாத்தா.
 
Post a Comment

<< கடைசியாக பதிந்த கட்டுரைக்கு செல்